Wednesday 11 September 2013

பாரதி காலமாகி போன நாள் இன்று.

தான் வாழ்ந்த காலத்தில் தான் வாழும் சமூகத்தை, மக்களை, மொழியை, தன் தேசத்தை தன் தோளில் ஏற்றி எவன் ஒருவன் உயர்த்துகிறானோ, அல்லது உயர்த்த எத்தனிக்கிறானோ அவனே கவிஞன்.
ஆம் அப்படி பட்ட தேசியக்கவிஞன் தான்,
நமது முரட்டு முண்டாசு கவிஞன்.

கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை தன் கடற்கரை உரையின் மூலம் வியர்க்க வைத்து அனுப்பியவன் அவன்.
நரம்புகளின் ஊடாக சுதந்திர எண்ணத்தை திணித்து, தோள்களை திணவுற செய்த நெருப்பு கவிஞன் அவன்.

வெள்ளையருக்கு எதிராய் அவன் வெடிகுண்டுகளை பயன் படுத்தவில்லை. ஆனாலும் அவன் கந்தக கவிதைகள் அவர்களை காயப்படுத்தியதோ என்னவோ? அவனை வெள்ளையர்கள் தீவீர வாதியாய் கருதினர்.

ஆம்,
அவன் வாழ்ந்து இருந்த பூமியில் நாமெல்லாம் வாழ வாய்ப்பு கிடைத்ததற்க்காக நன்றி சொல்வோம்.

அவனுக்கு சாவே இல்லை. சாகாதவனுக்கு இன்று நினைவு நாள்.

”நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!”
-பாரதி.