Saturday 15 December 2012

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-2. உங்களின் நினைவுகளோடு தொடர்புடையதாகவும் இருக்கலாம்

கடற்கரை பகுதியின் ஓரமாய் ஒதுங்கி கிடக்கும் கிளிஞ்சல்கள் போல நம் மனதின் ஓரமாய் ஒதுங்கி விடுகிறது சில நினைவுகள் . நம் தமிழ் சமூகத்தில் ஆண்  பெண்  உறவு ஒரு பாலியல் சார்ந்த உறவாகவே சித்தரிக்கப்படுகிறது , இது தற்கால நிகழ்வுதானே தவிர ஆதிமுதல் நாம் இப்படி இல்லை.
நிறைய இலக்கிய கதைகளில் ஆண் பெண் உறவு நட்பாகவே கருதப்பட்டு உயர்வு செய்து இருக்கின்றனர். ஒரு மாலை பொழுதில் கடற்கரையில் அமர்ந்து கடல் அலை பார்த்து கொண்டு இருந்த நேரம், மனதின் மடிப்புகளில் படிந்து போன ஒரு கவிதை சட்டென பளிச்சிட்டது. வேகமான ரயில் பயணத்தில் ஜன்னல் ஒர காட்சி போல, அந்த கவிதை,

நீயும் நானும்
நடந்து போகுகையில்
எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும் 
நம்மை நண்பர்களாகவே
பார்க்கும் பாக்கியம்.
                                                  -அறிவுமதி
ஒரு ஆணும் பெண்ணும் நடந்து போகும் போது, விரச கண்ணாடி  மனதிற்கு அணிவிக்காமல்
பார்க்கும் எத்தனை பேர் நம்மில் உண்டு. நல்ல பெண் தோழி மட்டும் கிடைப்பின் அவனின் வாழ்வில்  விரச விஷயங்கள் தீண்டாமல்
அவனால் வாழ முடியும். ஆம் ஒரு புனிதமான பெண் தோழியின் நட்பு என்பது மற்றொரு தொப்புள் கொடி உறவே. ஒரு தாய்மை உணர வாய்ப்பு
உண்டு. ஆனால் இதில் சில விதிவிலக்காக விபரீதங்களும் வந்து விடலாம். ஆனால் விதிவிலக்குகள் எல்லாம் உதாரணங்கள் அல்லவே. நாம் புனிதம்
பார்த்து பழக்கப்படுவோம். பெண்களின் குடும்பத்தில் ஒருவேளை மாற்றுகருத்து இருப்பின், அவள் யாரோடு பேசினாலும் அவளின் பெற்றோர் மனதில் நம்பிக்கை அற்ற எண்ணம் தோன்றும் எனில் அவள் சுயம் அதிகம் ஒடுக்கப்பட்டு விடும். அப்படித்தான் ஆண் பையனின் குடும்பத்திலும்.
இவ்வாறு அதீத ஒடுக்கு முறையால் சில நேரங்களில் மன தடுமாற்றம்  கொண்டு பிழைகள் நிகழ்ந்து விடுகிறது.
பொதுவில் எல்லா பெண்ணிற்கும் தன் தந்தை மீது ஒரு பகுக்க முடியாதா பிணைப்பு உண்டு. அதே போல் ஆணிற்கும் தன் அம்மாவின் மீது அப்படி ஒரு பந்தம்
இருக்கவே செய்யும்.
                 இதுவே ஆண் பெண் நட்பையும், பெண் ஆண் நட்பையும் தேடும் ஆதார புள்ளி. நல்ல நட்போடு பழகும் அப்பா தன் மகள் தேடும் நண்பன் சரியானவனா
அவன் இவளிடம் பழகும் போது நட்பு மட்டுமே எதிர்பார்க்கபடுகிறதா அவனால் என்பதை மிக கவனத்தோடு அணுகி, சரி எனில் அவர்கள் நட்பை அங்கீகரித்தும், தவறு எனில் மகளுக்கு புரியும் வண்ணம், வயதில் மூத்தவன் இந்த உலகில் நிறைய தனக்கு தெரியும் என்ற ஈகோ உணர்வு இல்லாமல் அவளோடு நட்பின் தொடுதலோடு சொன்னால் எந்த பெண்ணாலும் மறுக்க முடியாது. இது போன்று இருப்பின் வாழ்க்கை  துணை தேடும் பொழுதிலும், பருவ மாற்ற நிகழ்விலும்
அவளால் மிக தெளிவோடும், தமிழ் பண்பாட்டின் கண்ணியம் குறையாமலும் வாழ இயலும்.
அதுபோல ஆண் பையனின் வீட்டில் இருப்பின் அவன் தேவையற்ற கவன சிதறலால் அவனுக்கு ஏற்படும் தோல்விகள் தவிர்க்கப்படும். மிக சரியான பெண் தோழி கொண்ட ஒருவனால் சாலையின் ஓரம்  நின்று பெண்களை சீண்டும் பொறுக்கியாக இருக்கவே முடியாது. அவன் மனதில் அந்த எண்ணம் தோணும் பொழுதில் அவனை தலை தட்டி தடுமாறாமல் தாங்கி பிடிக்கும் பொறுப்பு அந்த தோழிக்கு கடமையாகிவிடும், அவனை சரி செய்யும் பணி அவளுடயதாகும்.
இயல்பில் ஒரு ஆண் நண்பனின் வார்த்தைகளின் மதிப்பை விட பெண் நட்பின் வார்த்தைகளின் மதிப்பு அதிகமே. எந்த தாய்க்கும் , தந்தைக்கும் தன் மகனை  சாலையோர பொறுக்கியாக பார்க்க வேண்டும் எனும் விருப்பம் இருக்காது.
        
              எந்த பெற்றோருக்கும் நல்ல நட்பின் மீது எதிர்ப்பே இல்லை காதலை கூட எதிர்ப்பவர்கள் உண்டு நட்பை எதிர்க்கும் பெற்றோர் உலகில் இல்லவே இல்லை. முதலில் பெண்ணோ ஆணோ தான் தன் பெற்றோரின் மன  எல்லை மீறி போய் விட மாட்டோம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி, அந்த நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பின் யாரும் எதிர்ப்பு சொல்வதில்லை. மேலும் அவர்களின் வழிகாட்டுதலை உதாசினப்படுத்தாமல் இருப்பின் நன்மை பயக்கும்.
எந்த பெற்றோரும் தன் பிள்ளைகள் மகிழ்ச்சியற்று வாழ வேண்டும் என நினைப்பதில்லை.

      ஆண் பெண் நட்பில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எந்த உறவிலும் உணர இயலாது. மேலும் சின்ன சின்ன சண்டைகள், கருத்து வேறுபாடுகள் , மற்றும் சில அழுகை, சில வருத்தம், சில மகிழ்ச்சி பொழுது, ...... இவையெல்லாம் உணர்தலின் சுகம் வித்தியாசமானது.
ஒரு காபி குடித்து முடித்தும் சில நிமிடம் அந்த சுவை நாவு விட்டு செல்லாமல் இருப்பது போல ஒரு கவிதை வாசித்து முடித்த போதும், இன்னும் சுவை போகாமல் நீடிக்கிறது,
காதலனின்
பார்வையில் உள்ளபோது
நான் என் ஆடைகளை
நொடிக்கொருமுறை சரியாக
உள்ளனவா என
கவனித்து சீர் செய்தேன்,
அனால் உன்னோடு
இருக்கும் பொழுது
தாய்மையோடு இருப்பதை
உணர்ந்தேன்.
கவலையற்று.

காரணம் என் தாயின் விழிகளின்
வழியாக பார்ப்பதால்.
                 இளம் நிலை கல்லூரி படிக்கும் போது ஒரு தோழி தான் ஒரு சில புத்தகம் வாங்க வேண்டும் என்றும் தன்னோடு புத்தக கடைக்கு வர சொல்லி அழைத்து இருவரும் நடந்து செல்கையில், எது எதோ பேசிக்கொண்டு வரும் போது , அவளாகவே சொன்னால் "என் காதலனோடு நடக்கையில் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் முகம் மறைத்து ,சிரித்தால் யாரும் அசிங்கமாக நினைப்பார்களோ என்ற  ஒரு பய உணர்வோடு மட்டுமே செல்வேன், ஆனால் உன்னோடு நான் நடக்கும் போது யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் இன்றி, சத்தமாக சிரித்தால் யாரும் தவறாக நினைப்பார்களோ என்ற அச்சமின்றி
மிகவும் சந்தோசமாக இருக்கிறேன், என்னை நானாக இருக்க வைத்தது உன் பிரண்ட்ஷிப் , தேங்க்ஸ் டா" இந்த வசனம் இன்னும் மனம் விட்டு மறையவே இல்லை . மேலும் அவளின் நட்பு அதன் பிறகு கால மாற்றத்தால் தொடர முடியாமல் போனபோதும், பல ஆண்டுகள் கடந்த போதும் அவளை அதன் பிறகு  வாய்ப்பு இல்லாமல் போனபோதும் , முகமும் முகவரியும் மறந்த போதும் அவளின் இந்த வாக்கியங்கள், ஆயிரம் வெள்ளங்கள்  கடந்தாலும் மண்ணில் பதிந்த  கூழான் கற்களை போல் அழகாய் அமிழ்ந்து மனதில் ஒட்டிவிட்டது.

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் , பேசிக்கொண்டே இருக்கிறது மென்மையாய் மனதிற்கு சுகமாய் .....
    



Sunday 9 December 2012

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -1

என்றைக்காவது எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை கவனித்து இருக்கிறீர்களா?
எங்கு துவங்கியது? எங்கு சென்று கொண்டு இருக்கிறது?  என்பதை பற்றி நினைத்து பார்த்தது
உண்டா?  வாழ்வில் பல சிறிய விஷயங்களை நாம் கவனிப்பதேயில்லை.
வாழ்வின் நினைவுகளும் அப்படித்தான் பல நேரங்களில் எங்கு துவங்குகிறது? எங்கு செல்கிறது?
என்பது பற்றிய பிரக்ஞை இருப்பதே இல்லை. இந்த வார்த்தைகள் பலரும் கேட்டிருக்க கூடும் "எதோ நினச்சுட்டு இருந்தேன்"
ஆம் , பலரும் தன் நினைவுகளின் ஓடையை ரசிப்பதே இல்லை. நம் மனதின் நினைவுகளையும் பதிவுகளையும் வாசிப்போம்.
பல நினைவுகளை பலரும் சொல்லிக்கொண்டே இருப்பதை காண முடியும்,குறிப்பாக வயதானவர்கள் தன் கடந்த கால நினைவுகளை பற்றி சொல்லும் போதும், பிறரின் நினைவுகளை கேட்கும் போதும்  ஒரு அயர்ச்சி இருக்கவே செய்கிறது.
பல வயதானவர்களின் ஆழ்ந்த வருத்தமே தான் மனம் விட்டு பேச இயலவில்லை என்பதாகவே இருக்கிறது.
பலரும் நம் விசயங்களை நம் வீட்டு வயதனவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை.
நாம் சொல்லும் காரணம் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதே.
இயல்பாக இதே வசனத்தை நம் வீட்டு முதியவர்களும் அவர்களின் மூத்தவர்களிடம் சொன்னதே!
ஆம் அதே போன்று நாமும் ஒரு நாள் கேட்போம் "உங்களுக்கு இதெல்லாம் புரியாது, சும்மா இருங்க " .

ஒருமுறை ஒரு ஆசிரமத்தில் ஒரு தியான பயிற்சிக்காக சென்ற போது, ஒரு முதியவர் வேறு ஒரு பயிற்சிக்காக வந்து இருந்தார்.
மாலை பொழுதில் அவரோடு பேசும் போது அவராக விசாரித்து பேச துவங்கினார், சுய விபரமளிக்கும் கட்டம் கடந்த போது, அவராகவே
சொன்னார், எனக்கு ஒன்னும் குறையில்லை , என் மகன் ,மருமகள் இருவரும் வங்கியிலும், தனியார் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர்.
நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், எனக்கு பணம் பற்றி கவலையே இல்லை. நிறைவாக வாழ்கிறேன் என்று சொல்லி சிறிய மௌன இடைவெளிக்கு பின்
இப்போது கூட தன் மகன் காரில் வந்து இறக்கிவிட்டு சென்றதாக சொன்னார். ஆனாலும் தன் பேச்சில் ஒரு துயர தொனி கொண்டே இருந்தார்.
மீண்டும் கொஞ்சம் மௌனம் தீர்ந்து வார்த்தைகளோடு சில துளி கண்ணீர் நிரப்பி சொன்னார். ஆனாலும் " நான் வீட்டில் ஒரு மௌன விரதம் மேற்கொண்டவன் போல் வாழ்கிறேன் என்று சொல்லி விட்டு  கண்ணீர் துடைத்து சொன்னார். ஆம் என் மகனும் , மருமகளும் காலையில் அவசர அவசரமாக வேலைக்கு சென்று
விட்டு மாலை அதீத களைப்பில் வந்து அறைக்கு சென்று அயர்ந்து விடுவார்கள். அவர்கள் என்னிடம் பேசும் வார்த்தைகள், என் மருமகள் "மாமா, டேபிளில் சாப்பாடு இருக்கு, பிளஸ்கில் காபி இருக்கு, கதவ நல்லா லாக் பண்ணிக்கங்க, நல்ல ரெஸ்ட் எடுங்க", என் மகனோ "அப்பா,  எதுவும் தபால் வந்த மறக்காம என் டேபிள் மேல வாங்கி வச்சிடுங்க?" மாலையில்  "என்னப்பா சாப்டிங்களா?, எதுவும் போன்,தபால் வந்ததா?" ,"வாங்க டின்னர் சாப்பிடலாம்"  இதுவே  தான் கேட்கும் வார்த்தைகள் மற்றும் உரையாடல்.
என சொல்லி விட்டு, ஆனாலும் எனக்கு ஒரு குறையும் இல்லை நான் நல்ல இருக்கிறேன்  என்று மீண்டும் சொல்லி சொன்னார், பாவம் அவர்கள் மீது குற்றம் இல்லை அவர்களின் வேலை பளு அதிகம் அதுதான் காரணம் என தானே தன் மனதிற்கு ஒரு களிம்பு வார்த்தைகள் பூசிக்கொண்டார்.  பேசவேண்டும் என்ற காரணத்தில் உங்களுக்கு பேரன், பேத்தி என கேட்டபோது , முகம் மலர்ந்து அவரின் ஒரே பேரன் அவனும் டெல்லியில் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் படிப்பதை பெருமையாக சொல்லிய போதும், அவனை பார்த்து பல மாதங்கள் ஆனதையும் சொல்லி வருந்தி, அவன் மிக திறமை சாலி  அசல் என்னை போலவே, நான் எப்படி சிறு வயதில் இருந்தேனோ அப்படியே இருக்கிறான் என சொல்லும் போது ஒரு துளி கண்ணீர் சிதறியது. நன்றி சொல்லி அவர் சென்றுவிட்ட பிறகும் நினைவுகளில் இருந்து அந்த கண்ணீர் காயவே இல்லை. தான்  கூட பேச யாரும் இல்லை என்ற நிலை, தான் பேசும் பேச்சை கேட்க யாரும் இல்லை என ஏங்கும்  மனிதர்களின் துயரம் உள்ளம் ஊடுருவக்கூடியது என்பதை உணரவே முடிகிறது.
"உலகில் விரும்பும் போது கிட்டாத தனிமையும், விரும்பாத போது தரப்பட்ட தனிமையும்
மரணத்தை விட கொடூரமானது தான்."


மௌனத்தோடு பேசிக்கொண்டே இருக்கிறது நினைவுகள் .............................

Friday 7 December 2012

மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்

நினைவுகள் பாறையின் இடுக்குகளில் கசிகின்ற நீர் போலத்தான் துளி துளியாய் கசிந்தே ஓடை யாகவே மாறிவிடுகிறது.
இந்த உலகில் யாருக்கும் தனக்குள் அனைத்தையும் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. ஆனால் தன் பகிர்கின்ற செய்தி ஒன்று கேளிக்கை ஆக்கப்பட்டு விடுமோ என்றோ, இல்லை திரித்து பலரிடம் சொல்லப்பட்டு விடுமோ என்றோ, இல்லை தன்னை தவறாக கணிக்க துவங்குவார்களோ, இல்லை தான் வளர்த்து வைத்திருக்கும் இந்த புறச்சூழ்நிலை அடையாளம் இழக்கும் நிலை வருமோ என்பதை தவிர வேறு எந்த காரணமும் இருக்காது. ஆனால் எல்லோரும் தன்னை பற்றி யாரிடமாவது வெளிப்படையாக பகிர மாட்டோமா என்கிற ஏக்கம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு நெருக்கமாக இருப்பினும் சில ரகசியங்கள் காக்கவே படுகிறது.
இருந்த போதும் தனக்கான ஒருவரிடம் தோள் சாய்ந்து எல்லாவற்றையும்  சொல்லி உள்ளீடு அற்று மாற மாட்டோமா என்கிற எண்ணம் இல்லாதவர் இல்லவே இல்லை.மகிழ்ச்சியின் போது மனம் இதுபோன்று சிந்திப்பதே இல்லை. அது  ஏனோ துயரங்களின் போது மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.
வெறுமை எல்லா நேரங்களிலும் கண்களுக்கு தெரிவதில்லை, அதுவே அதன் வெற்றியும் கூட .
முழு நீள இசைக்கச்சேரியில் நினைவுக்கு வராமலே போகும் சிறு இசைக்கருவி போல பலரும் நம் கண்களுக்கு தெரியாமலே போய் விடுகிறார்கள் நம் வாழ்வில் . ஆனால் சிறு நத்தை போல அவர்கள் மனதில் அது மெல்ல மெல்ல நகர்ந்து முழு நீளத்தையும் கடந்தே விடுகிறது நமக்கு தெரியாமலேயே.
நினைவுகளின் ஓடையிலே மனம் செல்கிறது ஆற்றின் பயணத்தில் விழுந்த இலை போல  எங்கு செல்லுமோ...

Monday 22 October 2012

கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்

இந்த மீசை கவிஞனின் வேண்டுதல் பாரீர் . இதை விட அழகான ஒரு வேண்டுதல்
இருக்குமோ!

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்,
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்.
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு, மரங்கள்,
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,

இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந்த் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும்,

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க', என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே
இந்நாள் இப்பொழுது தெனக்கிவ் வரத்தினை

அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.

Friday 11 May 2012

Abraham Lincoln's World Famous Letter to his Son's Teacher


Abraham Lincoln's World Famous Letter to his Son's Teacher 

He will have to learn, I know,
that all men are not just,
all men are not true.
But teach him also that
for every scoundrel there is a hero;
that for every selfish Politician,
there is a dedicated leader…
Teach him for every enemy there is a friend,

Steer him away from envy,
if you can,
teach him the secret of
quiet laughter.

Let him learn early that
the bullies are the easiest to lick…
Teach him, if you can,
the wonder of books…
But also give him quiet time
to ponder the eternal mystery of birds in the sky,
bees in the sun,
and the flowers on a green hillside.

In the school teach him
it is far honourable to fail
than to cheat…
Teach him to have faith
in his own ideas,
even if everyone tells him
they are wrong…
Teach him to be gentle
with gentle people,
and tough with the tough.

Try to give my son
the strength not to follow the crowd
when everyone is getting on the band wagon…
Teach him to listen to all men…
but teach him also to filter
all he hears on a screen of truth,
and take only the good
that comes through.

Teach him if you can,
how to laugh when he is sad…
Teach him there is no shame in tears,
Teach him to scoff at cynics
and to beware of too much sweetness…
Teach him to sell his brawn
and brain to the highest bidders
but never to put a price-tag
on his heart and soul.

Teach him to close his ears
to a howling mob
and to stand and fight
if he thinks he’s right.
Treat him gently,
but do not cuddle him,
because only the test
of fire makes fine steel.

Let him have the courage
to be impatient…
let him have the patience to be brave.
Teach him always
to have sublime faith in himself,
because then he will have
sublime faith in mankind.

This is a big order,
but see what you can do…
He is such a fine little fellow,
my son!

Friday 30 March 2012

கொடூர நள்ளிரவு

நெஞ்சில் பயங்கொள்ள
செய்யும் இரவு !
புரியாத மௌனமும், இருளும்.
சில உறுமல் ,
சில பிளிறல் ,
சொல்லத்தெரியாத
வினோத சப்தங்கள்.
திடுக்கிட்ட என்னிடம் சொன்னாள்
"பயப்படாத! கல்யாண மண்டபம் அப்படிதான் இருக்கும்
தூங்கு, வெறும் குறட்டை சத்தம் தான் " - அம்மா .

Monday 26 March 2012

அட கடவுளே !

வெளிநாட்டு பயணத்தில் பிரதீபா சாதனை: பயணச்செலவு ரூ. 205 கோடி
25 Mar 2012 05:00,
(25 Mar) புதுடில்லி: ஜனாதிபதியின் வெளிநாடு பயணத்திற்காக ரூ. 205 ‌கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்திற்காக இந்த செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்ற ஜனாதிபதிகளில் இவர் தான் அதிக முறை நாடுகளுக்கு சென்று சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்.இவரது பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் அதற்காக அரசு செலவிட்ட தொகை குறித்தும் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ‌அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 79 நாட்கள் என இதுவரை 12 முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டு 22 நாடுகளுக்கு அரசு முறைப்பணயமாக சென்றுள்ளார். இதில் ஏர் இந்தியா வாயிலாக சென்ற வகையில் விமானச்செலவு ரூ. 169 கோடி ரூபாயும்,
மற்றும் ஜனாதிபதிக்கான இதர சலுகைகள் மற்றும் தங்கும் வசதி உணவு போன்ற செலவினங்களாக ரூ. 36 ‌கோடியும் என மொத்தம் ரூ.205 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ரூ.169 கோடி ரூபாயினை ராணுவ அமைச்சகம் ஏற்றுள்ளது . ரூ.153 ‌கோடி மட்டுமே ஏர்இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பாக்கி தொக‌ை ரூ.16 கோடி நிலுவையில் உள்ளது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்ற‌ை தவிர அதிக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதிகளில் பிரதீபா பாட்டீல் தான் முன்னிலையில் உள்ளார். இதற்கு முன்பு அப்துல்கலாம் (47 நாட்கள்) 17 நாடுகளுக்கும், சங்கர்தயாள் ஷர்மா (1992-1997) 16 நாடுகளுக்கும், கே.ஆர். நாராயண் 10 நாடுகளுக்கும் தங்களது ஐந்து ஆண்டு பதவியில் வெளிநாடு சென்றுள்ளனர். தற்போதை ஜனாதிபதியாக உள்ள பிரதீபா பாட்டீல் 79 நாட்களில் 22 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

"எவ்வளவு பேருக்கு சோறு போட்ருக்கலாம்- நாசமா போச்சு , சும்மா எப்ப பார்த்தாலும் வெளிநாட்டுக்கு போறததவிர்த்தாலே கொஞ்சம் உலக வங்கி கடனை அடைத்திருக்கலாம்".

Monday 13 February 2012

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
    நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
  (படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
   எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே !  இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற  கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........

Friday 27 January 2012

தேர்வு செல்கிற நேரத்தில்


தேர்வு நெருங்குகிற நேரத்தில் உங்களுக்கு  வழக்கமான ஒரு அறுவை அறிவுரையாக இல்லாமல் அனுசரணையாக ஒரு நண்பனாய் உங்களோடு சில செய்திகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் உரைக்கு பின் உங்களின் உள்ளீட்டில் சில மாற்றங்களுக்கு நான் உதவியாகவே இருப்பேன். என் உரையோடு கவனித்து இருங்கள் கட்டாயம் பயனளிக்கும். காரணம் இவை அனைத்தும் செயல் முறையில் பயனளித்தவை வெறும் பேச்சு இல்லை. வாய்ப்பு இருப்பின் குறிபெடுங்கள்.
தேர்வை ஒரு தென்றலை போல அணுகுங்கள்:
 நீங்கள்விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேர்வின் பதற்றத்தை உங்களை விட மற்றவர் உங்களுள் ஏற்படுத்தும் வேலையில் இருப்பார்கள். ஒரு போரை போல நினைப்பவர்களே அப்படி பதற்றபடுவார்கள். இல்லை இது தென்றல் போல மென்மையாக கையாள வேண்டிய விஷயம்.

    பதற்றம் ஏற்படும் போது பயம் வரும், பயம் நடுக்கத்தை அழைத்து வரும், நடுக்கம் ஏற்படின் நினைவு தடுமாறும். பயமில்லாமல் தேர்வை சந்திக்கும் போதுதான் வெற்றி எளிமையாக கிடைக்கும். பயம் ஏற்படின் வெற்றியும் கைநழுவி தடுமாறி விழும்.தேர்வில் உங்களின் ஒவ்வொரு வரியும் மதிப்பெண்கள் என்பதை மறக்க வேண்டாம். ஆகவே மிக கவனத்தோடு செயல்படவும்.
அலட்சியம் அதி பயங்கர ஆபத்து:
     பதற்றம் இல்லாமல் இருப்பது வேறு அலட்சியமாக இருப்பது வேறு. திமிர் என்பது வீரம் அல்ல, பணிவு என்பதும் கோழைத்தனம் இல்லை.
     அலட்சியமாக இருத்தல் விபரீத இன்னல்கள் ஏற்படுத்தும் எப்போதும் கஷ்டப்படாமல் இருக்க கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு தான் ஆகவேண்டி உள்ளது.
         



           “துடிபில்லையானால்
            இருதயம் கூட துருப்பிடிக்கும்.
            நெருபில்லையானால்
            சூரியன் கூட கரிப்பிடிக்கும்
எதிர்பாராத சிரமங்களை தவிர்க்க எதிர்பார்த்த சிரமங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒப்பீடு மட்டும் வேண்டாமே:
       யாரோடும் ஒப்பீடு வேண்டாம், நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள், உங்களைவிட குறைவானவர்களோடு ஒப்பிட்டால் உங்கள் மனம் சுபீரியரிட்டி குறைபாட்டில் தள்ளிவிடும். உங்களை விட அதிக மாணவர்களோடு ஒப்பிட்டால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை எனும் குறை பாட்டை மனம் ஏற்படுத்தி விடும். உலகில் எல்லோரும் தனித்துவமனவர்களே!
தனித்துவத்தை ரசியுங்கள்.

தாழ்வு மனப்பான்மை தவிர்ப்போம்:
        நீதி அரசர் கற்பக விநாயகம் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி (ஜார்கண்ட் மாநிலம்- ஓய்வு ) நம் காரைக்குடிக்கு அருகே உள்ள கிராமத்து மனிதர் அவர் வெற்றிக்கு காரணம் கேட்டபோது அவர் சொன்னது,
            “ I will achieve, there is nothing which I cannot achieve”
இதை தினமும் சொல்லிக்கொல்வாராம்.ஆம் எல்லாமே சாத்தியம் தான்.
     “தீதும் நன்றும் பிறர்தர வாரா.
படிப்பதில் சில முறைகள்:
படிப்பது சுகமே:
       படிக்கிற பொது கடனுக்கு படிக்காமல் கருத்துடன் படித்தல் வேண்டும். ஈடுபாடு மிக அவசியம். ஏன் புத்தகம் வெறுப்பை அளிக்கிறது எனில் ஈடுபடின்மை மட்டுமே.
ஈடுபாடு வராததற்கு காரணம் அதை பற்றிய அறியாமை. புரிதல் இல்லாமை. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.
        தெரியாததை ஏற்றுக்கொண்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆசிரியரிடம் கேட்க வெட்கப்பட வேண்டாம். யாரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறக்கவில்லை.எல்லாமே கற்றுக்கொண்டதுதான். ஈடுபாடு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஆர்வம உங்களை உற்சாக படுத்தி வாசிக்க வைக்கும்.

நேரமேலான்மையும் திட்டமிடுதலும்:
       எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் எவ்வளவு நேரத்தில் செய்யவேண்டும் என்கிற சூட்சமம்தான் நேரமேலான்மை.
         பல்லியை கவனித்து இருப்பீர்கள் வேட்டையின் போது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து, சிறு சலனமும் இன்றி முன்னேறி இரையை பிடிக்கும். எந்த கல்விநிருவனமும் பல்லிக்கு சொல்லிக்கொடுக்கவில்லை.
சாப்பிடும் போது உணவு தான் உலகம், குளிக்கும் போது தண்ணீர் தான் அபிசேகம், விளையாடும் போது பந்தே உலக உருண்டை,படிக்கும் போது பாடமே வேதம்.
        சோம்பல் சுகம்
        ஒரு ஆண்டை கூட
        ஒரு வாரமாக மாற்றும்.
        சுறுசுறுப்பு ஒரு நாளை
        மாதமாக மாற்றும்.
நொடிகளை வீண் அடிப்பவர்கள் நொடிந்து போவார்.
அதை பயன் படுத்துபவர் ஒரு போதும் தோல்வி இல்லை.
திட்டமிடுதல் மிக அவசியம்
“ பல நூற்றாண்டு வாழ திட்டமிடுங்கள்
நாளையே இறந்து விடுவதாக எண்ணி செயல் படுங்கள்

திட்டமிட்டு செய்யும் செயல் மாற்றம் கொள்ளலாமே தவிர
வெற்றி விட்டு மாறது.
பணிகளை ஒவ்வொன்றாக தொகுத்து, தெளிவாக நேரம் ஒதுக்கி
செய்பவற்றை திருப்தியோடு செய்தால் எல்லா நாளும் கொண்டாட்டமே!

காதுகளுக்கு வேலை கொடுப்போம்:
        கற்றலின் கேட்டல் மிக நன்று, ஆகவே தான் வாயை கூட மூடுவதற்கு ஏற்பாடு செய்த இறைவன் கேட்பதற்கு எப்போதும் திறந்தே இருக்க செய்தான். ஆகவே வகுப்பில் ஆசிரியர் நடத்தும் போது காதுகளுக்கு வேலை கொடுங்கள்.
இரண்டு வகை ஆப்சென்ட் உண்டு,
           1.physically absent
             2.mentally absent
வகுப்பில் இருந்து ஆப்சென்ட் ஆக வேண்டாம். கவனிக்கும் போது தான் சில வார்த்தைகள் உங்கள் சந்தேகங்களை தீர்க்கலாம்.
காட்சிப்படுத்தவும்:
         நேரம் ஒதுக்கி அன்றாடம் என்ன நடந்தது என மனதில் காட்சி படுத்துங்கள், மனம் எல்லா செய்திகளையும் காட்சி களாக மட்டுமே பதிவு செய்கிறதாம். ஆகவே வகுப்பில் என்ன நடந்தது என்பதை மனதில் காட்சி படுத்துங்கள்.இதுவே உங்கள் மனப்பாட சக்தியை உயர்த்தும்.
பதிவு செய்யுங்கள்:
        காட்சி படுத்திய பின் தெளிவாக உங்களுக்கு புரியும் வண்ணம் ஒரு தாளில் குறிபெடுங்கள். எழுதியவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்து விட்டு அடுத்த நாள் வகுப்புக்கு செல்லுங்கள் தொடர்பு விடாமல் இருக்கும். பாடமும் எளிதில் புரியும்.வகுப்பில் விழிப்போடு இருக்க முடியும். முக்கியமாக போர் அடிக்காமல் இருக்கும்.
சோம்பல் தவிருங்கள்:
       எல்லோரும் மிக அழகாக திட்டமிடுவோம் ஆனால் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து விட்டு ஏழு மணிக்கு எழுந்திருபோம். உங்களின் மிக கொடூர எதிரி உங்கள் சோம்பல் மட்டுமே. உங்களுக்கு சுகமாய் தோன்றுமாறு செய்து உங்களை தோல்வி நோக்கி தள்ளும் எதிரி சோம்பல் தான். திட்டமிடும் போதே கவனமாக திட்டமிடுங்கள், ஆறு மணிக்கு தான் முடியும் என்றால் ஆறுமணிக்கு திட்டமிடுங்கள். விரைவில் எழ விரைவில் தூங்க செல்ல வேண்டும் என புரிந்து செயல்படுங்கள்.
துணிவோடு இருங்கள்: 
             “பட்டறை கல் எனில் அடிதாங்கு
              சுத்தி ஆனால் அடி “
எதுவும் முடியும் துணிவோடு இருங்கள். ஒரு போர் வீரன் வெற்றிக்கு பின் சொன்னது.
             “ நான்
               இளைப்பாறும் போதெல்லாம்
               என் வாளை தீட்டிக்கொண்டு இருந்தேன்  
               அதனால் தான் போரில் வெற்றி பெற முடிந்தது
ஆகவே எதையும் எதிர்கொள்ள தயாராய் இருங்கள். ஓய்வு நேரத்தில் கூட உங்கள் வெற்றி பற்றி சிந்தனையோடு இருங்கள்.
மூட நம்பிக்கை ஒழி:

          Fortune Favours to  the brave”
       கடவுள் எபோதும் உழைப்பவர்களுக்கே உதவி செய்வார் ஆகவே உழைக்கிற அனைவருக்கும் வெற்றி உண்டு.
“மெய்வருத்த கூலி தரும் என்பதற்கிணங்க கட்டாயம் வெற்றி கிட்டும் தூரம்தான் உழைக்காமல் எவ்வளவு இறைவனை வேண்டிய போதும் வெற்றி கிட்டாது. மேலும் நேர்மை வழி மட்டுமே திருப்தியான மகிழ்வை தரும். நேர்மை அற்ற வழி சொல்ல முடியாத துயரத்தை வர வைக்கும்.
சுய மதிப்பீடு:
      அறையில் ஆடாவிட்டால் அம்பலத்தில் ஆட இயலாது ஆகவே பல முறை தேர்வை போன்றே எழுதிப்பாருங்கள்.
வைக்கும் அனைத்து மாதிரி தேர்வுகள் அனைத்தையும் இறுதி தேர்வு என்றே கருதி எழுதினால் இறுதி தேர்வு பயமின்றி பதற்ற மின்றி தேன் போன்று சுவைத்து எழுதமுடியும்.

ஏற்றுக்கொள்ள துணிவோம்:
      தேர்வு எழுதிய பின் யார் விமர்சனத்தையும் கேட்காதீர்கள், கணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். முடிவு வந்த பின் கூட வேண்டாம். எது வந்ததோ முழுமையாக ஏற்று அடுத்து நடக்க போவதில் கவனம் செலுத்துங்கள். தெளிவாக முடிவெடுங்கள்.
உங்கள் முடிவில் உங்கள் எதிர் காலம் என்பதை உணர்ந்து முடிவு செய்யுங்கள்.
       வெற்றி மட்டும் கிட்டும் தூரம் தான்.
வெற்றி:
 மனம் என்பது கணணி போன்றது.
 கணணி கூட மனித ஆக்கத்தின் சிறு துளியே!
 என்னை பொருத்தவரை,
கடுமையான உழைப்புக்கு வேண்டுமானால் வெற்றி தோல்வி இருக்கலாம்.
ஆனால்
அர்பணிப்புக்கு வெற்றி மட்டுமே உண்டு.
“Whatever you do
Do it with a sense of perfection
Do it with a sense of satisfaction
Do it with a sense of devotion
Do it with a sense of dedication
Do it with a sense of determination
Then surely,
You will get a Distinction!





Thursday 26 January 2012

இலக்கியம் சொல்கிறது உணவுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பைவிட

உணவுக்கும் சுவைக்கும் உள்ள  தொடர்பினை போல,  உணவு பரிமாறுபவரின் மன நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிற கருத்தை அதிகம் வலியுருத்துகிறவன் நான்.
நான் நினைத்ததை போலவே பலருக்கும் எண்ணம் உண்டு என்பதை  நான் அறிவேன் . உணவு பரிமாறுதல் பற்றி ஒரு சங்க காலப்புலவனிடம் கேட்ட போது அவர் சொல்கிறார்.
"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
  உப்பிலா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
 முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
 கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே." - சீவக சிந்தாமணி.
ஆம் உணவு உபசரித்தலில் தமிழன் வானுயர வளர்ந்த பாரம்பரிய புகழ் பெற்று இருந்த போதும் காலத்தின் சூழலால்
மாற்றங்கள் உள்புகுந்து மனதை மாற்றிடுமோ என பயம் கொள்ள செய்கிறது.
ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணனின் அரண்மனைக்கு விச்வாமித்திரர் வருவதை அறிவிப்பு வந்தது, உணவு உபசரிப்புக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனுக்கும் அவரின் வருகை தெரிவிக்கப்பட்டது. விச்வாமித்திரர் மிக கோபக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே, உணவு உபசரிப்பில் ஏதேனும் குறை எனில் உடனே சாபமும் அளிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே, மேலும் பல இடங்களில் உணவு உபசரிப்பில் குறை ஏற்பட்டு பலரையும் சபித்தும்  உள்ளார். இந்த சூழலில் ஸ்ரீ கிருஷ்ணன் அரண்மனைக்கு வருகை புரிந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு உணவருந்த அழைத்து செல்லுமாறு தனது சமையல் காரனுக்கு ஆணையிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த சமையல் காரனுக்கு வேண்டிய வரங்களையும் அளித்தார். இந்த தகவல் அறிந்த மற்ற அரண்மனை ஆட்கள் வந்து ஸ்ரீ கிருஷ்ணனின் சமையல் காரனை கேட்டனர், " அவர் சாபம் அளிக்காமல் இருந்ததே ஆச்சர்யம், ஏதேனும் குறை சொல்லி விட்டு தான் போவார் எப்படி வரங்கள் தந்தார்?" என கேட்டதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் சமையல் காரன் சொன்னான்" விச்வமித்திர முனிவரின் அம்மா எப்படி சமைப்பார்கள் அவரின் உப்பு காரம் எவ்வளவு என்றும், அவரின் அம்மா எவ்வாறு அன்பு சேர்த்து பரிமாறுவார் என்றும் ஸ்ரீ கிருஷ்ணனிடம்  கேட்டு அறிந்து அதன் படி சமைத்து, அம்முறையிலேயே பரிமாறினேன்" என்று சொன்னாராம்.

Monday 16 January 2012

கருங்காலி

மர வகைகளில் உள்ள கருங்காலி மட்டுமே, துரோகத்தின் அடையாளமாக சொல்லபடுவதன் காரணம் அறிதலே இந்த இடுகையின் நோக்கம்.
கோடரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில்  கைப்பிடி செய்ய உகந்த மரம் தான்
கருங்காலி மரம். வேறு எந்த வகையையும் விட அதிகம் பயன் படுவதும் இந்த மரம் தான். ஒரு மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது.
அதானாலேயே கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.
கருங்காலி இந்த அவப்பெயருடனேயே பல நூற்றாண்டுகளாய் சுமையோடு வாழ்கிறது. மனிதனே ஒருமரத்தை தன் தேவைக்கு பயன் படுத்தி அந்த மரத்திற்கும் ஒரு நீங்க அவப்பெயரை கொடுத்து இழிவும் செய்வது தான் வருந்துதலுக்கு உரியது. இப்போதெல்லாம் கருங்காலி என யாராவது, யார்   சொன்னாலும், கருங்காலி மரம்  நம்மை நன்றி கேட்ட துரோகி என்று என்றேனும் சொல்லிவிடுமோ என்ற அச்சம் நெருடுகிறது.

Friday 6 January 2012

மார்க்கங்கள்

கடவுள் இருகின்றாரா? அப்படி இருப்பின்  கடவுள் யார்? அவரை உணர்வதற்கான வழி முறை என்ன? என்பது போன்ற அடிப்படையான கேள்விகள் எல்லா எல்லோர் மனதிலும் (மதத்திலும்) உண்டு.இறை தேடலுக்கு அதுவே தோற்றுவாயாகவும் உள்ளது. இறை தேடலுக்கு பல்வேறு மார்க்கங்கள் உண்டு. அவையாவன .
1 .பக்தி மார்க்கம் .
2  .ஞான மார்க்கம்.
3  .கர்ம மார்க்கம்.

பக்தி மார்க்கம்:
                 இறைவனை சரணடைந்து, இறைவனை சரணாகதி மூலமே அடைதல் சாத்தியம் என   இறைவனை நினைந்து நினைந்து, அவனை போற்றி செய்து இறை உணர்வை அனுபவித்து தேடல் கொள்தலே பக்தி மார்க்கம்.
இதற்கு நல்ல உதாரணம்:
பக்தை மீரா இறைவனை நினைந்து நினைந்து சரணடைதலே நோக்கம் என இறைவனை அடைந்தது.
ஞான மார்க்கம்:
                 அறிவின் மூலம் இறை நிலை யை உய்ய இயலும் என்று, யோகம், தியானம் (அஷ்டாங்க யோகம்)போன்ற முறைகள் மூலம் இறை தேடலை நடத்தி இறைவனை அடைய முயல்வது பக்தி மார்க்கம்.
உதாரணம்:
        ஆதி சங்கரர், மாத்வர் போன்றோர்.
கர்ம மார்க்கம்:
               இது முற்றிலும் மாறுபட்டது, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற கீதை கூற்றின் படி,  தான் செய்கின்ற கருமமே(கர்மம் என்பதன் பொருள் செயல் என்பதாகும் ) இறைவன் என கருதி முழு ஈடுபாடுடன் வேறு எந்த சிந்தனையும் இன்றி, செய்கின்ற கடமையை மிக சிரத்தையுடன் செய்தாலே ஆகும்.

                இவையே மேற்கண்ட மார்க்கங்களின் வரையறை ஆகும்.